April 30, 2017

திரிசங்கு எனும் நான்

மண்புரந்த என்னை
உடலோடு விண்ணேறும்
வேட்கை அழைத்தது
தவப்பயன் தந்து
கௌசிகனும் வழியனுப்பினான்
வசிட்டன் சொல்கேட்டு
இந்திரன் வரவேற்கவில்லை
விண்தொடாது மண்படாத
உலகை எனதாக்கினேன்
பிரஜைகளே வாருங்கள்
முந்துபவருக்கு 
இவ்வுலகையே தருவேன்
நான் மண்பட.

28.01.2017

No comments: