இராவணன் பெருவீரன். மாபெரும் இசைக் கலைஞன். அவன் கொடியே வீணைதான். சாம வேதம் பாடுவதிலும், காம்போதி இராகம் இசைப்பதிலும் வல்லவன் என்றும் ஹம்ஸத்வனி எனும் இராகத்தை வடிவமைத்தவன் என்றும் சொல்லப்படுகிறது. பெரும் ஆற்றலும் திறமையும் பெற்றிருந்தும், தம்மை விரும்பாத ஒரு பெண்ணை அடைய விரும்பி, கவர்ந்து வந்து சிறை வைத்து, இறுதி வரை வெளிவிட மறுத்ததால் வீழ்ந்துபட்டான்.
வாரணம் பொருத மார்பும்,
வாரணம் பொருத மார்பும்,
வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப
நயம்பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும்,
சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும் களத்தே போட்டு,
வெறும் கையோடு இலங்கை புக்கான்.
எட்டுத் திசை யானைகளோடு போரிட்ட மார்பையும், திருக்கயிலையையே பெயர்த்தெடுத்த தோள்களையும், நாரத முனிவர்க்குச் சரிக்குச் சரியாக இசை வாதம் செய்த நாவையும், மாலை அணிந்த கிரீடங்கள் பத்தையும், சிவன் உவந்தளித்த சந்திரஹாஸம் எனும் வாளையும், தன் வீரத்தையும் போர்க்களத்திலேயே போட்டுவிட்டு இராமனிடம் தோற்று வெறும் கையோடு இலங்கையில் நுழைந்தான் இராவணன் என்கிறான் கம்பன்.
- யுவபாரதி
No comments:
Post a Comment